சேலம் மாவட்டம் சின்ன புதூர் பகுதியில் சுமார் நூறாண்டு பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கடந்த 2000-ஆவது ஆண்டு இக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவின்போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக கடந்த 19 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இக்கோயில் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதிக்கக்கோரி சின்ன புதூர், பெரிய புதூர், மிட்டா புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இருதரப்பினருக்கும் உள்ள முன்விரோதம் காரணமாக கோயில் திருவிழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அலுவலர்களிடம் மனு அளித்துள்ளனர்.