சேலம் அம்மாபேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ஈசன் இளங்கோ. சமூக ஆர்வலரான இவர் பொங்கல் பண்டிகையின்போது தபால் கார்டுகளை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தபால் கார்டு மூலம் வாழ்த்து தெரிவிப்பார். இந்த ஆண்டு புதுமையான முயற்சியில் ஈசன் இளங்கோ ஈடுபட்டுள்ளார். இதன்படி தபால் காடுகளை மாணவ மாணவிகள் எழுத வேண்டும் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி ஒரு லட்சம் தபால் கார்டுகளை வாங்கி வைத்துள்ளார்.
பின்னர் இந்த தபால் கார்டுகளை பள்ளிகளுக்கு எடுத்துச்சென்று மாணவ மாணவிகளுக்கு வழங்கி கட்டாயம் தபால் கார்டுகளை பயன்படுத்தி உறவினர்கள், நண்பர்களுக்கு கடிதம் எழுதுங்கள். இதன் மூலம் நட்பு அதிகரிக்கும், உறவு பலப்படும், கையெழுத்து அழகாக மாறும் என தெரிவிக்கிறார்.