தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 29, 2019, 11:23 PM IST

ETV Bharat / state

கார்த்திகை தீப விழாவிற்காக விளக்கு விற்பனை கண்காட்சி!

சேலம்: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் புதிய விளக்கு விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது.

கார்த்திகை தீப விழாவிற்காக விளக்கு விற்பனை கண்காட்சி!
கார்த்திகை தீப விழாவிற்காக விளக்கு விற்பனை கண்காட்சி!

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் கீழ் இயங்கும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஒவ்வொரு பண்டிகை நேரங்களிலும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தரமான அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு கண்காட்சியாக வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் எதிர்வரும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி புதிய வகையிலான, தமிழர் பாரம்பரிய அடையாளங்களை காட்சிப்படுத்தும் வகையில் விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது.

கார்த்திகை தீப விழாவிற்காக விளக்கு விற்பனை கண்காட்சி!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியுள்ள இந்த கண்காட்சியில், 6 அடி முதல் 12 அடி அளவிலான மலபார் விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், விநாயகர் விளக்குகள், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள் என 50க்கும் மேற்பட்ட வகையிலான விளக்குகள் இடம்பெற்று உள்ளன.

இந்தக் கண்காட்சி இன்று தொடங்கி வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 5 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...கீழடி ஆய்வுக்குக் காமராசர் பல்கலை. 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு: துணைவேந்தர் தகவல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details