சேலம்: கரோனா இரண்டாம் அலை பரவலின் தடுக்கும் நடவடிக்கையாக இன்று (மே.10) முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைளுக்காக காலை 4 மணி முதல் மதியம் 12 மணிவரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்: கரோனா குறைய வாய்ப்பு - lockdown
முழு ஊரடங்கால் உழவர் சந்தை, இரயில் நிலையம், ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
![ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்: கரோனா குறைய வாய்ப்பு முழு ஊரடங்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11702968-thumbnail-3x2-slm.jpg)
முழு ஊரடங்கு
கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்துவருகின்றனர். இதனால் இறைச்சி கடைகள், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டனர்.
இதையும் படிங்க:அமலானது முழு ஊரடங்கு: நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை!