தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - demand to provide land

சேலம்: எம்ஜிஆர் நகர் மக்களை காலி செய்ய வலியுறுத்தி ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, மாற்று இடம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எம்ஜிஆர் நகர் ரயில்வே நிர்வாக பிரச்னை  மாற்று இடம் கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை  demand to provide land  salem mgr nagar pepole protest
மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

By

Published : Dec 23, 2019, 1:32 PM IST

சேலம் அடுத்த டால்மியா போர்டு அருகிலுள்ள எம்ஜிஆர் நகரில் 130 குடும்பங்கள் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் 40ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்போது தண்டவாள விரிவாக்கப் பணிக்காக அப்பகுதியிலுள்ள மக்களை நான்கு நாட்களில் காலி செய்யுமாறு ரயில்வே துறை நோட்டீஸ் வழங்கியது.

ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நோட்டீஸ்

இந்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

உடனடியாக எங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக எச்சரித்தனர்.

இதையும் படிங்க: அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது மோடிக்கு வெறுப்பு - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details