தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் திருமணம் செய்த மகளின் கருவைக் கலைத்த பெற்றோர் கைது - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: காதல் திருமணம் செய்த மகளின் கருவைக் கலைத்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெற்றோர் கைது
பெற்றோர் கைது

By

Published : Feb 2, 2021, 2:42 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த சிறுவாச்சூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (40) - செல்வி (37) தம்பதி. இவர்களின் 19 வயது மகள், ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சாக்கூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்தார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காதலர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இதனையடுத்து நான்கு மாதங்களுக்கு முன் மகளின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதற்கு நீதிமன்றம், திருமணம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜனவரி 21ஆம் தேதி பெற்றோரை பார்க்க மகள் வந்தார். அப்போது, அவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சுப்பிரமணி மற்றும் செல்வி தங்களது மகளை அழைத்துச் சென்று கருவை கலைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து அப்பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட இளைஞர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதனடிப்படையில் ஆத்தூர் மகளிர் காவல் துறையினர் சுப்ரமணி மற்றும் செல்வியை இன்று (பிப்.2) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை பகுதியில் சரண்யா என்பவரின் 5 மாத கருவை செவிலியர் பூமணி என்பவர் கலைத்துள்ளார். இவருக்கு புகழ் என்பவர் உதவியதாக தெரிகிறது. இது தொடர்பாக மல்லியகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர்' - மருத்துவர்களின் தவறால் 12 குழந்தைகள் அவதி

ABOUT THE AUTHOR

...view details