கேரள மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
மேலும் பயங்கரவாதிகள் சிலர் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் எனவும் தெரிய வந்ததையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்திவருகிறார்கள்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அலி நிவாஸ், அப்துல் சமீம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சமது, காஜா முகைதீன் ஆகிய நான்கு பேர் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்து பின்னர் கன்னியாகுமரி வழியாகத் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த நான்கு பேரும் இந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள், ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினருக்குத் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அனுப்பி கண்காணிக்க அறிவுறுத்தினர்.