தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் - அலுவலர்கள் ஆய்வு - Salem Veterinary Research Park

சேலம்: கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழா ஏற்பாடு பணிகளை அரசுத் துறை முதன்மைச் செயலர்கள் ஆய்வு செய்தனர்.

inspection
inspection

By

Published : Feb 1, 2020, 2:49 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசல் வி.கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகின்ற 9ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து விவசாயப் பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கினையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவிற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

விழா ஏற்பாட்டு பணிகளை ஆய்வுசெய்த அரசு முதன்மைச் செயலர்கள்

இதனிடையே விழா ஏற்பாடு குறித்த முன்னேற்பாடு பணிகளை வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் அ.ஞானசேகரன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, ஆத்தூர் சட்டபேரவை உறுப்பினர், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'அழிந்துவரும் மோளை ஆடுகளைப் பராமரிக்க கால்நடை ஆராய்ச்சி நிலையம்'

ABOUT THE AUTHOR

...view details