நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணன் எம்எல்ஏ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தை எடுத்துச்சொல்லி கிராம மக்களிடம் முதலமைச்சர் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடைபெறுகிற அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.