தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடை இயங்க மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மாநகராட்சியின் தடை உத்தரவை மீறி ஆட்டிறைச்சி கடை திறந்திருப்பதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், அங்குள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆட்டிறைச்சிகள் விற்பனைக்காகப் பேக்கிங் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 15 கிலோ ஆட்டு இறைச்சியைப் பறிமுதல் செய்து கடைக்குச் சீல் வைத்தனர்.