தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை எரிவாயு குழாய் வழித் திட்டம் மூலம் உரம், பெட்ரோ கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும்! - coimbatore news in tamil

Natural Gas Pipeline: இயற்கை எரிவாயு குழாய் வழித் திட்டம் மூலம் உரம், பெட்ரோ கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என கெயில் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் மோவர் தெரிவித்துள்ளார்.

krishnagiri-to-coimbatore-natural-gas-pipeline-project
இயற்கை எரிவாயு குழாய் வழித் திட்டம் மூலம் உரம், பெட்ரோ கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 10:37 PM IST

சேலம்: கிருஷ்ணகிரி முதல் கோவை வரையில் 294 கி.மீ. நீளத்தில் ரூ.2,187 கோடி மதிப்பில் இயற்கை எரிவாயு குழாய் வழித் திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் இது குறித்து, கெயில் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் மோவர், தலைமை பொது மேலாளர் ஆறுமுகம், வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் ஜோதிகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, "தேசிய எரிவாயு விரிவாக்க நடவடிக்கையாகக் கொச்சி, கூட்டநாடு, பெங்களூரு, மங்களூரு குழாய் வழி திட்டத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணகிரி முதல் கோவை வரையிலான 294 கி.மீ. நீளத்தில் ரூ.2,187 கோடி மதிப்பிலான இயற்கை எரிவாயு குழாய் வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

திருச்சியில் நடைபெறும் பல்வேறு திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து காணொலி வாயிலாகச் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மத்திய அரசு இயற்கை எரிவாயு பங்கை 6.7 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி முதல் கோவை வரையிலான குழாய் தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் வழியாகச் சென்று தமிழகத்தின் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணையும்.

இதன் மூலம் உரம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான சி.என்.ஜி. மற்றும் குடியிருப்புகளுக்கான இயற்கை எரிவாயு வழங்கப்படும். மேலும், கரியமில வாயுவைக் குறைப்பதற்கும், இயற்கை எரிவாயுக்கு தடையின்றி கிடைக்கவும் பங்களிக்கும்.

இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணியில் சுமார் 6.5 லட்சம் பேர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுவர். இத்திட்டத்தில் 2.7 லட்சம் கரியமில வாயு உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீடித்த நிலைத்தன்மையை ஏற்படுத்தும்.

அதேபோல் 9 மாவட்டங்களில் 59.2 லட்சம் நுகர்வோர்களுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இத்துடன் 1,198 சி.என்.ஜி. நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 2024 நவம்பர் மாதத்திற்குள் முடித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இயற்கை எரிவாயு குழாய் வழி திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி கொண்டு செல்லப்படுகிறது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. நிலத்தில் பதிக்கப்படும் குழாய்கள் அனைத்தும் பல மடங்கு பாதுகாப்புத் தன்மையுடன் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் தொடர் மேற்பார்வையிடப்படும்.

இத்திட்டம் முழுமை பெறும்போது நுகர்வோர்களுக்குக் குறைந்த செலவில் இயற்கை எரிவாயு கிடைக்கும். மேலும் உரம், பெட்ரோ கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க இயற்கை எரிவாயு வழங்கப்படும்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங்குடன் போச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை" - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்!

ABOUT THE AUTHOR

...view details