சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான தீபக் (24) அப்பகுதியிலுள்ள உரக்கடை ஒன்றில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது அத்தை மகளான வேதவள்ளி என்பவரைக் காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேதவள்ளி, தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அருகிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதனைக்கேட்டு உள்ளே சென்ற அவரது பெற்றோர் பார்க்கையில் வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் உடலில் தீக்காயங்களுடன் அவரை மீட்டு அருகேவுள்ள மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.