சேலம் மாவட்ட நீர் மேலாண்மை, சேமிப்பு குறித்து அரசு தனியார் பொறியியல் வல்லுநர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இதில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் திருப்புகழ் ஐஏஎஸ் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
அதில் பேசிய அவர், "இந்தியா முழுவதும் 256 மாவட்டங்கள் வறண்ட மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வரும் மாவட்ட பட்டியலில் சேலம் மாவட்டம் 84ஆவது இடத்தில் உள்ளது. அதனால் சிறப்பு கவனம் செலுத்தி சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு வேகமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.