தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் கைது - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் கைது
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் கைது

By

Published : Apr 23, 2021, 7:26 PM IST

சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவருக்கும் மனைவி கல்பனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே இன்று (ஏப்ரல்.23) மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பாஸ்கர் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்பனா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற உதவி ஆணையர் ஆனந்த குமார் தலைமையிலான காவல் துறையினர், கல்பனாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாஸ்கரனையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாகப் பதிவிட்ட கணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details