ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு சரக்கு ரயில் மூலம் வெளிமாநிலங்கள் சென்ற அறுவடை இயந்திரங்கள்! - வெளிமாநிலங்கள் சென்ற அறுவடை இயந்திரங்கள்

சேலம்: சிறப்பு சரக்கு ரயிலின் மூலம் சின்ன சேலத்திலிருந்து தெலங்கானாவின் நல்கொண்டா, கர்நாடகாவின் சூரத்கல், ஆந்திராவின் எலுரு ஆகிய பகுதிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

சரக்கு ரயில் மூலம் வெளிமாநிலங்கள் சென்ற அறுவடை இயந்திரங்கள்
சரக்கு ரயில் மூலம் வெளிமாநிலங்கள் சென்ற அறுவடை இயந்திரங்கள்
author img

By

Published : Nov 3, 2020, 10:29 PM IST

தெற்கு ரயில்வேயின் ஒரு புதிய முயற்சியாக, 138 டன் எடையுள்ள டோன்ட் பால் சேலத்திலிருந்து நாகாலாந்தின் திமாபூருக்கு சிறப்பு சரக்கு ரயிலில் கொண்டுசெல்லப்பட்டது. தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் பார்சல்களை கொண்டுசெல்வதற்குப் பயன்படுத்தப்பட்டன.

இத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சியாக, இன்று ( நவ. 03 ) 32 வேகன்களில் ஏற்றப்பட்ட 83 அறுவடை இயந்திரங்கள் சின்ன சேலத்திலிருந்து ஆந்திராவின் எலுருவுக்கு கொண்டுசெல்லப்பட்டன. அறுவடை இயந்திரங்களைக் கொண்டு சின்ன சேலத்திலிருந்து புறப்படும் ஐந்தாவது ரயில் இதுவாகும்.

முன்னதாக ஒரு சரக்கு ரயில் மூலம் அறுவடை இயந்திரங்கள், தெலங்கானாவின் நல்கொண்டா பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து, இரண்டு சரக்கு ரயில்களின் மூலம் அறுவடை இயந்திரங்களை கர்நாடகாவின் சூரத்கல்லுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

தொடர்ந்து, ஒரு சரக்கு ரயிலின் மூலம் அறுவடை இயந்திரங்கள் ஆந்திராவின் எலுருவுக்கு கொண்டுசெல்லப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று (நவ. 03) 83 அறுவடை இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

இதையும் படிங்க:சரக்கு ரயில் சேவை: புதிய சாதனை படைத்த தெற்கு ரயில்வே

ABOUT THE AUTHOR

...view details