இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம் நாடு முழுவதும் தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்விக்காக அவர் ஆற்றிய பணியையும், தளரா உழைப்பையும் கௌரவிக்கும் விதமாக இன்று சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தேசிய கல்வி நாள் கொண்டாடப்பட்டது.
இதில், கல்வியாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிந்தனைகள் எல்லா பள்ளிகளுக்கும் முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்?
இந்தியா பிளவு படுவதை தடுக்க தீவிரமாக பாடுபட்டவர் அபுல் கலாம் ஆசாத். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து பல முறை சிறை சென்றுள்ளார்.