தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் மூன்று குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தொடக்கம்! - The hill villages of Salem

சேலம்: மலைக்குன்றுகள் சூழ்ந்த மூன்று குக்கிராமங்களுக்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகத்தை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கிவைத்தார்.

சேலத்தில் மூன்று குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தொடக்கம்!  குடிநீர் விநியோகம்  சேலம் மலைக்கிராமங்கள்  கொங்குப்பட்டி  Drinking water supply to three villages in Salem  Drinking water supply  The hill villages of Salem  Konguppatti
Drinking water supply

By

Published : May 20, 2020, 11:04 PM IST

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்காவுக்கு உட்பட்ட கொங்குபட்டி ஊராட்சியில் மலைக் குன்றுகளால் சூழப்பட்ட 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில், பெரியகும்பானூர், தோப்புக்காடு, ஏரிக்காடு உள்ளிட்ட மூன்று குக்கிராம மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குன்றுகளின் மேல் ஏறி கீழே இறங்கி சென்று தண்ணீர் எடுத்து மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இது தொடர்பாக அக்கிராம மக்கள் அரசுக்கு குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த மூன்று கிராமங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார். அதன்படி, மூன்று கிராமங்களுக்கும் இன்று தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைக்கும் சட்டப் பேரவை உறுப்பினர் வெற்றிவேல்

இந்நிகழ்ச்சியில், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு மூன்று கிராமங்களிலும் தண்ணீர் குழாயை திறந்து வைத்து குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். மேலும், தங்களின் நீண்டகால கோரிக்கையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்த ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சலூன் கடைகள் திறப்பு: பதிலளிக்க அரசுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details