திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (மே 14) மாலை 4 மணிக்கு வருகை தருகிறார். இதற்காக வத்தலக்குண்டு சாலை வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு மேலே செல்லவும், கீழே இறங்கி செல்லவும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து தடை செய்யட்டது.
பின்னர் ஆளுநர் இரவு தங்கி, நாளை (மே 15) காலை நடைபெறும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு, மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பழனியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கொடைக்கானல் நகருக்கு வருகை தந்த ஆளுநர் ரவியைக் கண்டித்தும் கருப்புக் கொடி காட்ட முயன்றனர்.