சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ள கோர்ட் ரோடு பிரதான சாலையில் கழிவுநீர் முழுவதும் பிரதான சாலையில் வெளியேறி அந்தப் பகுதி முழுவதும் ஆறு போல் காட்சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவருகிறது.
தமிழ்நாடு அரசு சென்ற மாதம் சேலம் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்து ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கியது. மேலும், ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் சாக்கடை நீர் வெளியே செல்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.