மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சேலம் எஸ்ஆர்பி மைதானத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவிப்புகள் வெளியாகின.
இதற்காக தலை வாசல், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுக தொண்டர்கள் வந்தனர். அப்போது அவர்களை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் திமுக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.