தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனமரத்துபட்டி ஏரியை தூர்வாருக! சேலம் எம்.பி. வலியுறுத்தல் - சேலம்

சேலம்: பனமரத்துபட்டி கிராமத்தில் உள்ள ஏரியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஏரியை உடனடியாக தூர்வாருமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

பனமரத்துபட்டி ஏரி

By

Published : Jun 22, 2019, 7:51 PM IST

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரியானது சுமார் இரண்டாயிரத்து 137 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி கடந்த காலங்களில் சேலம் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக விளங்கி வந்ததுடன், தமிழ்நாட்டில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலமாகவும், படப்பிடிப்புத் தலமாகவும் செயல்பட்டுவந்தது.

பனமரத்துபட்டி ஏரியை பார்வையிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன்

அதேபோல் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், கருவேல மரங்கள் முளைத்ததன் காரணமாகவும் நீரின்றி ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், விவசாயமும் பொய்த்து உள்ளது. இந்நிலையில் பனமரத்துபட்டி ஏரியை பார்வையிட்ட சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், நீர் ஆதாரத்திற்கான வழிவகைகளை தெரிந்துகொண்டனர். இதனையடுத்து ஏரியை உடனடியாக தூர்வாரக்கோரி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details