தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சளி காய்ச்சல் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்! - Selvakumar, Deputy Director, Salem District Health Department

சேலம்: அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சளி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் செல்வகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வகுமார்  சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வகுமார்  சுகாதாரத்துறை இணை இயக்குநர் செல்வகுமார் செய்தியாளர் சந்திப்பு  Selvakumar, Deputy Director, Department of Health  Selvakumar, Deputy Director, Salem District Health Department  Deputy Director of Health Selvakumar Press Meet In Salem
Deputy Director of Health Selvakumar Press Meet In Salem

By

Published : Jan 21, 2021, 7:09 PM IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரஞ்சிதாவுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது பள்ளியில் அவருடன் படிக்கும் சக மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் என அனைவருக்கும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவி தங்கியிருந்த மாணவியர் விடுதியையும் மாவட்ட சுகாதாரத் துறை மூடியுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் செல்வகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில்," கடந்த 19ஆம் தேதி மாணவி தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவியுடன் படிக்கும் சக மாணவியர், அவரது விடுதி அறையில் அவருடன் தங்கியிருந்த மாணவிகள் என 36 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பெரியகிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாணவி ரஞ்சிதா பள்ளி வரும்போது அவருக்கு சளி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர் பள்ளிக்கு வந்துள்ளார். எனவே சேலம் மாவட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் சளி காய்ச்சல் அறிகுறி இருந்தால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களாக சேலம் மாநகர் முழுவதும் சுகாதாரத் துறை சார்பில் செய்யப்பட்ட பரிசோதனையில் 25 மாணவ மாணவியருக்கு சளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முழுவீச்சில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை செய்துவருகிறது. பெற்றோர் அச்சப்பட வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு சளி, காய்ச்சல்? பள்ளியில் தனி அறை தயார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details