சேலம் மாவட்டம் ஐந்து ரோடு அருகே உள்ள சொர்ணபுரி பகுதியில், பழமை வாய்ந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டடம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆக. 31) கட்டட இடிப்புப் பணியில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்டபட்டியைச் சேர்ந்த முருகன், தமிழ்மணி, ஸ்ரீதர் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மூவரும் கட்டடத்தை இடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முருகன் மீது சுவர் சரிந்து விழுந்தது .