தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு குழு ஆய்வு - inspection

சேலம்: காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைக் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி தலைமையிலான குழுவினர் மேட்டூர் அணையை ஆய்வு செய்தனர்.

மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு குழு ஆய்வு

By

Published : Jun 11, 2019, 12:00 AM IST

சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையைக் கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவானது காவிரி ஆறு பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை குறித்து முழு விவரங்களை சேகரித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 4, 5ஆம் தேதிகளில் இத்துணைக் குழுவினர் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றப்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று தமிழக எல்லையில் உள்ள மத்திய நீர் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிலி குண்டுலுவையும், தொப்பையாறு பகுதியையும் ஆய்வு செய்த குழு, பிற்பகலில் மேட்டூர் அணைக்கு வந்து நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு குழு ஆய்வு

பின்னர் இது குறித்து மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில்,"காவிரி ஆற்றுப்படுகையில் எந்தெந்த பகுதிகளில் தானியங்கி நீர் அளவீட்டுமானி பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஜூலை 31ஆம் தேதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் இன்று மேட்டூர் அணையை எங்கள் குழு பார்வையிட்டது. நாளை பவானிசாகர் அணை, அமராவதி அணை, மற்றும் பாண்டிச்சேரிக்கு மாநிலத்தில் காவிரி ஆறு செல்லும் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details