சேலம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் திடீரென நேற்றிரவு ஓமலூரில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்தது. இந்தச் சூறைதக்காற்றால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதில் ஓமலூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரமும், அரசமரமும் வேரோடு சாய்ந்தன. இதனால் சேட்டு, சிவசங்கரி, கார்த்திக், லட்சுமி ஆகியோரது வீடுகள் பலத்த சேதமடைந்தன.
வீட்டினுள் சிக்கியவர்கள் வெளியே வர இயலாமல் அலறியடித்தனர். பின்னர், அவர்களைப் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், ஆலமரத்தடியில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு எருமை மாடு உயிரிழந்தது.