தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது - etv bharat

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

4 பேர் கைது
4 பேர் கைது

By

Published : Jul 27, 2021, 4:04 PM IST

சேலம்: கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித் என்பவர், பழனியிலிருந்து அவரது நண்பர் அருணுடன் நேற்று முன்தினம் (ஜூலை. 25) இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

கார் மோதி விபத்து

அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி அருகில் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சி

இந்த விபத்து குறித்த காணொலி பின்னால் வந்த கார் ஒன்றில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் சமூக வலைதளங்களில் வைரலான காணொலியை கொண்டு மகுடஞ்சாவடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தாகும் காட்சி

காவல் துறையினர் விசாரணை

அதில் விபத்தை ஏற்படுத்திய கார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது. காரில் 4 பேர் பயணித்த நிலையில் சதீஷ்குமார் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிரடியாக கைது

இதையடுத்து, மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக செயல்பட்டு காரை ஓட்டிய சதீஷ்குமார், காரின் உரிமையாளர் வினோத் உள்ளிட்ட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

எஸ்.பி பேட்டி

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறுகையில், "மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நான்கு பேரை கைது செய்துள்ளோம். இந்த விபத்து நடந்த காணொலி சமூகவலைதளங்களில் வெளியானதால், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முடிந்தது" என்றார்.

எஸ்பி பேட்டி

நீதிமன்ற காவல்

தற்போது, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:பைக் மீது மோதிய கார் - பதற வைக்கும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details