தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வேலை, வருமானமற்று ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சேலம் மத்திய மாவட்ட அமமுக சார்பில், நெத்திமேடு பகுதியில் உள்ள ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை , காய்கறி உள்ளிட்ட பொருட்களை கழக அமைப்புச் செயலாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான வீரபாண்டி எஸ். கே. செல்வம், மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.