தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலுக்கும் கோரிக்கை: சேலம் ரயில் நிலையம் முற்றுகை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சேலம் ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

By

Published : Dec 14, 2020, 4:21 PM IST

சேலம் ரயில் நிலையம் முற்றுகை
சேலம் ரயில் நிலையம் முற்றுகை

சேலம்: வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சேலம் நகர ரயில் நிலையம் மு‌ன்பாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டம், மின்சார சீர்திருத்த சட்டம் ஆகிவற்றை திரும்பப் பெற வேண்டும், கூட்டுறவு வங்கிகளை தேசியமயமாக்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு வேளாண் சட்டத்தினால் பாதிப்பில்லை என அரசு தெரிவிப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

சேலம் ரயில் நிலையம் முற்றுகை

இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் வேலுசாமி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வண்ணம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டம்: ஜாமியா மாணவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details