சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே ரயில்வேகேட் ரயில் பாதையில் பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண் மீட்பு - railway police
சேலம்: ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் உடலை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

salem railway murder
சேலம் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்பு
உடற்கூறு ஆய்வில் அந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பெண் யார்? ஏன் கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் ரயிவே காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் பெண் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.