சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், தன் மனைவி சாந்தி, மகள் ரம்யா மற்றும் மகன் தீனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனது மகன் தீனாவை அவரது பாட்டி வீட்டில் தூங்க செல்லுமாறு ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி தீனாவும் தனது பாட்டி வீட்டிற்கு உறங்கச் சென்றுவிட்டு, மீண்டும்இன்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டினுள் தனது தாய், தந்தை, சகோதரி ரம்யா ஆகியோர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.