தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2019, 4:52 PM IST

ETV Bharat / state

மக்கள் பணியாற்ற வயது தடையில்லை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 92 வயது மூதாட்டி!

சேலம்:  ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட 92 வயது மூதாட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

92 year old lady Filed nomination in Local Body election
92 year old lady Filed nomination in Local Body election

தமிழ்நாட்டில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. இன்று ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால், சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேட்பாளர்களின் கூட்டம் அலைமோதியது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 92 வயது மூதாட்டி

இன்று வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி கனகவள்ளி வேட்புமனு தாக்கல் செய்தார். முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவராகப் போட்டியிடும் கனகவல்லி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகித்துள்ளார்.

92 வயதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூதாட்டி ஒருவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தது, வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மதுரை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்பனை - ஐந்து பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details