தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நலப்பணிகள் - 50 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நலப்பணிகள்

சேலம்: காடையாம்பட்டியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கிவைத்தார்.

50 lakhs benefit works started for salem people

By

Published : Oct 4, 2019, 9:18 PM IST

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியிலுள்ள மோரூர் காலனியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள், சாக்கடைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதை சீரமைக்க தமிழ்நாடு அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சேலத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நலப்பணிகள்

இதையடுத்து, சட்டமன்ற நிதியிலிருந்து சுமார் 50லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்களுக்கான பணிகளை ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கிவைத்தார்.

இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மோசமான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி: சேலம் எம்.பி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details