சேலம் மாநகர காவல்துறை சார்பில் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெல்மெட் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் வெளியீட்டு விழா மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் செந்தில்குமார், சேலம் மாநகரில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் காவலன் செயலி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டிலேயே சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சேலம் மாநகர காவல்துறை இரண்டாமிடம் வகிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறந்த விழிப்புணர்வு குறும் படங்களை உருவாக்கிய குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி காவல் ஆணையர் செந்தில்குமார் பாராட்டினார்.