ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிசம்பர் 13) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சேகர்பாபு, "தமிழ்நாட்டில் வரும் 7 மாதங்களில் 551 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற 47 திருக்கோயில்களுக்கு வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த கோயில்களுக்கு பேருந்து வசதிகள், கழிவறை வசதிகள், மலைப்பாதையில் உள்ள கோயில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி, தானியங்கி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோயில் நிலங்கள் மீட்பு
வரும் 5 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொழி, இன, சாதி, மதங்களைக் கடந்து இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.