தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைந்த செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு! - Ranipet latest news

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே கரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய, குறைந்த செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தயாரித்து இரு இளைஞர்கள் அசத்தியுள்ளனர். இதனை ஆய்வுக்குட்படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரக்கோணம் இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
அரக்கோணம் இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

By

Published : May 19, 2021, 10:20 AM IST

Updated : May 19, 2021, 5:39 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் குறிஞ்சிநகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் நரேஷ், அனிஷ் மேத்யூ. இருவரும் இந்திய காங்கிரஸ் மாணவர் படை சார்பில் ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். இதில் அனிஷ் மேத்யூ பெங்களூருவில் வானியல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கரோனாவால் தனியார், அரசு மருத்துவமனைகளில் புதிதாக நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் வசதி ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகள் தோறும் கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகின்றன. ஆக்ஸிஜன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்து அதிக செலவில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்வதைக் குறைக்க எண்ணினர்.

குறைந்த செலவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு!

மாற்றாக குறைந்த செலவில் உள்நாட்டு பொருட்களை கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி காற்றில் உள்ள 21 விழுக்காடு ஆக்ஸிஜனை, ஜியோ லைட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தி, கம்ப்ரசர் மூலம் தனியாக பிரித்து எடுத்து குடுவையில் சேமிக்கும் தத்துவத்தைப் பயன்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.

உள்நாட்டு பொருட்களை கொண்டு 40 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம், ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற வீதத்தில் ஆக்ஸிஜனை தயாரிக்கும் திறன் படைத்தது. இதன் வெளிநாட்டு இறக்குமதி மதிப்பு 1 முதல் 1.25 லட்சம் ஆகும்.

தங்களது இயந்திரத்தை ஆய்வுக்குட்படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அனுமதி கேட்டு இருவரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜை நேரில் சந்தித்தனர். பின்னர் அதன் செயல்முறையையும் அவரிடம் விளக்கினர்.

இளைஞர்களின் முயற்சியை வெகுவாகப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க : வீடுகளை விட்டு வெளியே வந்தால்... - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Last Updated : May 19, 2021, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details