ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அருகே கள்ளாற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுக்க சென்ற தலைமைக் காவலர் கனகராஜ் (41) டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். பின்பு அவரை கொலை செய்த சுரேஷ் (32) என்பவரை காவல்துறை கைது செய்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜுலை, 20ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுளாக நடைபெற்று வந்தது.