bullfighting festival: ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த மாங்குப்பம் கிராமத்தில் 43ஆம் ஆண்டு புகழ்பெற்ற எருது விடும் திருவிழாவானது வெகுவிமர்சியாக இன்று (ஜன.22) நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 43ஆவது ஆண்டு எருது விடும் திருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று தயாராக இருந்த தடங்களில் சீறிப்பாய்ந்தன. போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.