தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

முன்விரோதத்தால் உயிரிழந்த இளைஞர்
முன்விரோதத்தால் உயிரிழந்த இளைஞர்

By

Published : Mar 1, 2020, 7:36 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள திருவரங்கம் ஊராட்சிமன்றத் தலைவர் அன்னபூரணம். இவரது மகன் பொன்னிவளவன் (30). இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த குமரவேலு மகன் மலைச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கருப்பன் கோயில் அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மலைச்சாமி பொன்னிவளவனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

முன்விரோதத்தால் உயிரிழந்த இளைஞர்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் மலைச்சாமியை கைதுசெய்தனர். பொன்னிவளவன் உடலை மீட்ட காவல் துறையினர் உடல்கூறாய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:உளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கையில்லை - ரவுடி கொலையால் காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details