கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாக, காவல் துறையினர், மருத்துவத் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெருந்தொற்றுக்கு எதிராக இவர்கள் தீவிரமாகப் போராடிவருகின்றனர். இருந்தபோதிலும், காவல் துறையினர் தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக மனஅழுத்ததிற்கு உள்ளாகின்றனர்.
இவர்களின் மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் போக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆண், பெண் காவலர்கள் என 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்மகரிஷி என்பவர் யோகா பயிற்றுவித்தார்.