ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே கும்பரம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளதா என்பதை அறிய மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்துள்ளார். தற்போது, அவரது உடல் உடற்கூறாய்வு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.