தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2021, 10:08 PM IST

ETV Bharat / state

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

இராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு
இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

இராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியைச் சேர்ந்தவர் கருங்கண். இவரது மனைவி வள்ளி நேற்று ( ஏப்ரல் 17) வெளியே சென்று விட்டு அவரின் சகோதரர் மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீ்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுமடம் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து வள்ளி தவறி கீழே விழுந்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.. இதுகுறித்து, உச்சிப்புளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details