தமிழ்நாடு

tamil nadu

கிராம சபைக்கு வந்தவர்களுக்கு ரூ.500 - முண்டியடிக்கும் மக்கள் வைரல் வீடியோ!

By

Published : Dec 27, 2020, 3:42 PM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு ரூ.500 பணம் வழங்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

கிராம சபைக்கு வந்த 500 ரூவா...முண்டியடித்துக்கொள்ளும் மக்கள் வைரல் வீடியோ!
கிராம சபைக்கு வந்த 500 ரூவா...முண்டியடித்துக்கொள்ளும் மக்கள் வைரல் வீடியோ!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த மகிண்டி ஊராட்சியில் திமுக சார்பில் அரசின் அனுமதியின்றி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதுகுளத்தூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி தலைமை தாங்கி நடத்தினார்.

இக்கூட்டத்திற்கு மிகிண்டி, சூரங்குளம், உடைகுளம் ஆகிய கிராமங்களிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் 500 பேர் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமலும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பணம் வாங்க முண்டியடித்துக்கொள்ளும் மக்கள் வைரல் வீடியோ!

கூட்டம் முடிந்த பின்னர், கிராமசபை என்ற பெயரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.500 வழங்கப்பட்டது. பணம் வாங்க சென்ற பெண்கள் கூட்டத்தில் முந்திக்கொண்டு பணத்தை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர். பணம் வழங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க...தாம்பரம், செல்போன் திருடிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details