இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் யோகா செய்து, யோகா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் யோகா நிகழ்ச்சியை அரசு சார்பில் நடத்தவில்லை.
அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்! - ramanadhapuram
ராமநாதபுரம்: உலக யோகா தினத்தை முன்னிட்டு, வாழும் கலை இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர், அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்தினர்.
![அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்! jala yoga உலக யோகா தினம் ஜலயோகா வாழும் கலை இயக்கம் அக்னித் தீர்த்க் கடல் ராமநாதபுரம் ராமேஸ்வரம் rameshwaram ramanadhapuram vaalum kalai iyakkam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7711110-thumbnail-3x2-rameshwaram.jpg)
அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்
அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் வாழும் கலை இயக்கம் சார்பாக அதன் தலைவர் போஸ், சுடலை ஆகிய இருவரும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டும்; உலகம் நன்மை பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அக்னி தீர்த்தக்கடலில் ஜலயோகா செய்தனர். இதனை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் ஆச்சர்யமாக பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்க:யோகா செய்தால் கற்றல் திறன் அதிகரிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து!