தமிழ்நாடு

tamil nadu

போலி மருத்துவர்கள் இருவர் கைது - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ராமநாதபுரம்: முறையான மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By

Published : Nov 7, 2019, 9:49 PM IST

Published : Nov 7, 2019, 9:49 PM IST

Two fake doctors arrested by police at ramanathapuram

ராமநாதபுரத்தில் அதிகளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக சுகாதாரத் துறைக்குத் தொடர்ந்து தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் சுகாதாரத் துறையினர் விசாரித்ததில், பனைகுளத்தில் வசித்துவரும் அக்பர் அலி (53) மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து கொண்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சன்னதி தெருவில் மல்லிகை பார்மா என்ற பெயரில் தோல்நோய் மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தது தெரிந்தது.

அக்பர் அலி

இதனையடுத்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையில் சென்ற மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவரிடம் சான்றிதழ் இல்லாதையடுத்து போலி மருத்துவர் என்பதை உறுதி செய்தனர். பின் இது குறித்து பஜார் காவல் நிலையத்திற்கு சுகாதாரத் துறையினர் தெரியப்படுத்திய நிலையில், காவல் துறையினர் அக்பர் அலியை கைது செய்தனர்.

மைக்கேல்

இதைத் தொடர்ந்து திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் மைக்கல். இவர் அந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பொது மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இன்று விசாரணையில் போலி மருத்துவர் என்பதை சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்ததையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

போலி மருத்துவர்கள் கைது

ராமநாதபுரத்தில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கூச்சலிட்டுப் பிறந்தநாள் கொண்டாடிய மருத்துவர்கள் - அவதியுற்ற நோயாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details