தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரமக்குடியில் தொடர்ந்து ஆடுகளை திருடிய இருவர் கைது - two arrested for stealing sheep

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே தொடர்ந்து ஆடுகளை திருடிய இளைஞர் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆடுகளை திருடிய இருவர் கைது
ஆடுகளை திருடிய இருவர் கைது

By

Published : Dec 28, 2020, 7:15 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, பார்த்திபனூர், கமுதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடுபோயின. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் பார்த்திபனூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கமுதக்குடி கிராமத்திலிருந்து ஆடுகளை திருடி அபிராமம் சந்தைக்கு விற்க சென்ற இரண்டு பேர் காவல் துறையினரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் பரமக்குடி மேலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.

இவர்கள் தொடர்ந்து ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: சிசிடிவியில் சிக்கிய ஆடு, மாடு திருடும் கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details