தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு! - ramanathapuram latest news

ராமநாதபுரம்: முள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்
மீனவர்

By

Published : Jun 9, 2021, 2:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் சமயக்குமார். இவர் இன்று (ஜுன் 9) காலை 11 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாரா விதமாக படகிலிருந்து கடலில் விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருவாடானை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details