ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் மைக்கேல்பட்டி புளியால் பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி. இவரது நண்பர் சந்திர போஸ். இருவரும் நேற்று (ஜூலை 28) இருசக்கர வாகனத்தில் சென்று தனுஷ்கோடியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கு மது அருந்தியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி மாலை 6 மணிக்கு மேல், அரியமான் கடலில் இருவரும் சேர்ந்து குளித்துள்ளனர். இதில் தயாநிதி கடலில் குளித்தபோது, அதிக அளவு கடல் நீரை குடித்து கரையில் அமர்ந்திருந்துள்ளார்.