பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
அச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே இருந்து ஊர்வலமாக வந்த அவர்களை காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தினர்.
இதனால், காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டத்தை செய்துவருகின்றனர்.