ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு, நெடுந்தீவு, தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகை நோக்கி கற்களைக் கொண்டு தாக்கியதில் இரண்டு படகுகளின் கண்ணாடி முழுவதும் சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.