ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி(70) ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ளவர்களில் 21 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர். மேலும் 9 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் பரமக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு மேலாக ராமநாதபுரத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து ராமநாதபுரத்திற்கு வந்த தொழிலாளர்கள் 6 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.